Sunday, June 19, 2011

சரஸ்வதி சிலைகள் திறப்புவிழா அழைப்பு

எமது பாடசாலையின் இரு பிரிவுகளிலும் சரஸ்வதி சிலை அமைக்கும் பணி நடை பெற்று வந்ததை அறிந்திருப்பீர்கள்.

இச் சிலைகளின் திறப்பு விழா இன்று காலை நடை பெற்றது. அது பற்றிய தகவலை மேற் கண்ட அழைப்பிதழில் காணுங்கள். விழா கல்லூரி அதிபர் திரு.மு.கனகலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை பெரிய வழாகத்தின் சிலையானது அமரர்களான பத்மநாதன் இராசலஸ்மி தம்பதிகளின் நினைவாக அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது.

அதே வேளை சிறிய வளாகத்திற்கான சிலையானது அமரர்  வை.கா.சிவப்பிரகாசம் அவர்களது நினைவாக அமைக்கப்படுவதற்கு அவரது மகன் திரு.சிவப்பிரகாசம் முகுந்தன் நிதியுதவி அளித்துள்ளார்கள்.

சிலையை அமைத்த சிற்பக் கலைஞர் கலாபூசணம் கோ.வேலுப்பிள்ளை அவர்கள் விழாவில் கெளரவிக்கப்பட்டார்.

சிலை அமைப்பதற்கு நிதியுதவி வழங்கியவர்களுக்கும், சிலையை அமைத்த கலைஞர்களுக்கும், சிலை அமைப்பதற்கு முன்முயற்சி எடுத்த அதிபர் திரு.மு.கனகலிங்கம, சக ஆசிரியர்கள், விழாவில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் எமது ஒன்றித்தின் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Post Comment

2 comments:

  1. "மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"
    பாடசாலை அபிவிருத்தி சபையினர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!!!!!

    நன்றி
    நித்தியானந்தன் சிவரூபன்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை ஒன்றியம் வரவேற்கிறது