Saturday, September 3, 2011

எமது போசகர் திரு சி பாலச்சந்திரன் மறைவு

எமது ஒன்றியத்தின் போசகர் திரு சிற்றம்பலம் பாலச்சந்திரன் அவர்கள் காலமான துயரைச் செய்தியை அறியத் தருகிறோம்.

அவரது பூதவுடல் தற்பொழுது  தெஹிவலையில் 33, 2வது ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


நாளை (0.4.09.2011 ஞாயிறு ) காலை 9.30 மணிக்கு கல்கிஸ்ஸ பொது மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் வீரகேசரி நிறுவனத்தில் முன்னாளில் முகாமையாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை பிரமகுமாரிகள் ராஜயோக நிலையங்களின் ஊடக இணைப்பாளராக உள்ளவர் என்பதும் குறிப்படத்தக்கது.

வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி பாலச்சந்திரன் அவர்களின் கணவருமாவார்.

அவரின் மறைவுக்கு எமது ஒன்றியத்தின் துயரைத் தெரிவிப்பதுடன் அவரது குடும்பத்தினரின் துயரில் பங்கு கொள்கிறோம்.

0.0.0.0.0.0

Post Comment

1 comments:

  1. உங்கள் செய்தி வருத்தம் அளிக்கிறது

    கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

    4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை ஒன்றியம் வரவேற்கிறது